வல்லினம் மிகா இடங்கள்
வல்லினம் மிகா இடங்கள்
- அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று, அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
அது + சிறிது = அது சிறிது
எது + பெரியது = எது பெரியது?
அவை + போயின = அவை போயின
எவை + பெரியவை = எவை பெரியவை?
அன்று + பார்த்தான் = அன்று பார்த்தான்
என்று + காண்பேன் = என்று காண்பேன்?
அத்தனை + செடிகள் = அத்தனை செடிகள்
எத்தனை + பழங்கள் = எத்தனை பழங்கள்?
அவ்வளவு + பேர் = அவ்வளவு பேர்
எவ்வளவு + தருவாய் = எவ்வளவு தருவாய்?
அவ்வாறு + பேசினான் = அவ்வாறு பேசினான்
எவ்வாறு + படித்தாள் = எவ்வாறு படித்தாள்?
- படி, ஆறு என்னும் சொற்கள் சேர்ந்து வரும் வினையெச்சச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.
சான்று:
கண்டபடி + பேசினான் = கண்டபடி பேசினான்
சொன்னபடி + செய்தான் = சொன்னபடி செய்தான்
கண்டவாறு + சொன்னான் = கண்டவாறு சொன்னான்
சொன்னவாறு + செய்தான் = சொன்னவாறு செய்தான்
வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்
வருமாறு + கூறினான் = வருமாறு கூறினான்
- எண்ணுப் பெயர்களின் முன் வல்லினம் மிகாது
சான்று:
ஒன்று + போதும் = ஒன்று போதும்
இரண்டு + தடவை = இரண்டு தடவை
மூன்று + குழந்தைகள் = மூன்று குழந்தைகள்
நான்கு + கால்கள் = நான்கு கால்கள்
ஐந்து + சிறுவர்கள் = ஐந்து சிறுவர்கள்
ஆறு + கடைகள் = ஆறு கடைகள்
ஏழு + சிறுகதைகள் = ஏழு சிறுகதைகள்
ஒன்பது + கிரகங்கள் = ஒன்பது கிரகங்கள்
நூறு + பழங்கள் = நூறு பழங்கள்
- ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்ணுப்பெயரடைகளின் முன்வரும் வல்லினம் மிகாது.
சான்று:
ஒரு + பொருள் = ஒருபொருள்
இரு + தடவை = இருதடவை
அறு + படைவீடு = அறுபடைவீடு
எழு + கடல் = எழுகடல்
- இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
சாமி + கும்பிடு = சாமி கும்பிடு (சாமியைக் கும்பிடு)
நகை + செய்தான் = நகை செய்தான் (நகையைச் செய்தான்)
கனி + தின்றான் = கனி தின்றான் (கனியைத் தின்றான் )
காய் + கொடுத்தான் = காய்கொடுத்தான் (காயைக் கொடுத்தான்)
தமிழ் + படித்தான் = தமிழ் படித்தான் (தமிழைப் படித்தான்)
நீர் + பருகினான் = நீர் பருகினான் (நீரைப் பருகினான்)
- நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
பொன்னி + கணவன் = பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்)
- ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
காளி + கோயில் = காளிகோயில்
கண்ணகி + சிலம்பு = கண்ணகி சிலம்பு
தம்பி + துணி = தம்பி துணி
மகளிர் + கல்லூரி = மகளிர் கல்லூரி
ஆசிரியர் + கழகம் = ஆசிரியர் கழகம்
தாய் + சொத்து = தாய் சொத்து
மனைவி + கண்ணீர் = மனைவி கண்ணீர்
நடிகை + கோபம் = நடிகை கோபம்
வள்ளி + திருமணம் = வள்ளி திருமணம்
- ஒடு, ஓடு, கொண்டு என்னும் உருபுகளின் முன் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
என்னொடு + படித்தவன் = என்னொடு படித்தவன்
யாரோடு + பேசினாய் = யாரோடு பேசினாய்?
கத்தி கொண்டு + குத்தினான் = கத்திகொண்டு குத்தினான்
(கத்தியால் குத்தினான்)
வாள்கொண்டு + போர் செய்தான் = வாள்கொண்டு போர் செய்தான்
- வினைத்தொகையில் வல்லினம் மிகாது
சான்று:
நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்
ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்
சுடு + காடு = சுடுகாடு
நடு + கல் = நடுகல்
குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
மூடு + பனி = மூடுபனி
சுடு + சோறு = சுடுசோறு
விடு + கதை = விடுகதை
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
திருவளர் + செல்வி = திருவளர் செல்வி
- உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
இட்லி + தோசை = இட்லி தோசை (இட்லியும் தோசையும்)
யானை + குதிரை = யானை குதிரை (யானையும் குதிரையும்)
மா + பலா + வாழை = மா பலா வாழை (மாவும், பலாவும், வாழையும்)
இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்)
நரை + திரை = நரைதிரை (நரையும் திரையும்)
கல்வி + கேள்வி = கல்வி கேள்வி (கல்வியும் கேள்வியும்)
நன்மை + தீமை = நன்மை தீமை (நன்மையும் தீமையும்)
- எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
கண்ணகி + பேசினாள் = கண்ணகி பேசினாள்
- விளித்தொடரில் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
மகளே + பார் = மகளே பார்
- ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
வா + கண்ணா = வா கண்ணா
போ + தம்பி = போ தம்பி
வாழ்க + தலைவா = வாழ்க தலைவா
வருக + புலவரே = வருக புலவரே
- பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது. (தெரிநில், குறிப்பு, எதிர்மறை)
சான்று:
வந்த + பையன் = வந்த பையன்
ஓடிய + குதிரை = ஓடிய குதிரை
கேட்ட + கேள்வி = கேட்ட கேள்வி
சிறிய + பேனா = சிறிய பேனா
நடக்காத + செய்தி = நடக்காத செய்தி
- ஆ, ஓ என்னும் வினா எழுத்துகளை இறுதியிலே கொண்டு முடியும் சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
அவனா + தந்தான் = அவனா தந்தான் ?
அவளோ + கொடுத்தாள் = அவளோ கொடுத்தாள் ?
- பல, சில என்னும் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.
சான்று:
பல + பொருள் = பலபொருள்
சில + பூக்கள் = சிலபூக்கள்
- இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடர்களில் வரும் வல்லினம் மிகாது.
சான்று:
ஆதி + பகவன் = ஆதிபகவன்
தேச + பக்தி = தேச பக்த
- வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் வந்தால் வல்லினம் மிகாது
சான்று:
எழுத்து + கள் = எழுத்துகள்
வகுப்பு + கள் = வகுப்புகள்
ஆக்கு + தல் = ஆக்குதல்
வாழ்த்து + தல் = வாழ்த்துதல்
செல்லு + தல்=செல்லுதல்
- இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.
சான்று:
சலசல _ இரட்டைக்கிளவி
கலகல.
_ இரட்டைக்கிளவி
ஆடு
ஆடு _
அடுக்குத்தொடர்
ஓடு
ஓடு ஓடு _ அடுக்குத் தொடர்
...............................................................................................................................
கருத்துகள்
கருத்துரையிடுக