அற இலக்கியம் - நான்மணிக்கடிகை 11 பாடலும் விளக்கமும்
நான்மணிக்கடிகை
நான்மணிக்கடிகை குறிப்பு எழுதுக.
Ø நான்மணிக்கடிகை என்ற சொல்லுக்கு நான்கு மணிகள் பதிக்கப்பெற்று கழுத்தில் அணியும் அணிகலன் என்பது பொருள்.
Ø இதனைப் போன்று ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்து பண்பை மேம்படுத்தி மனதிற்கு அழகு ஊட்டுவதால் இப்பெயர் பெற்றது.
Ø இதன் ஆசிரியர் விளம்பி நாகனார்
Ø 104 பாடல்களைக் கொண்டது
Ø வெண்பா யாப்பால் ஆனது
Ø அம்மை என்னும் வனப்பினைச் சார்ந்தது
Ø இதன் காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு
Ø இந்நூலை ஜி.யூ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
Ø அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் என்ற சிலப்பதிகார கருத்து இந்நூலில் உள்ளது
Ø கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும், மான் வயிற்றில் அரிதாரம் கிடைக்கும், கடலுள் முத்து பிறக்கும் என்பது போன்ற அரிய செயல்கள் இந்நூலில் உள்ளன
நான்மணிக்கடிகை பாடல் 11
நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி என்ப தாமரை – பெண்மை
நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம்
தான்செல உலகத்து அறம்
நான்மணிக்கடிகை கூறும் அணிகலன்கள் யாவை?
அல்லது
மனிதனுக்கு இவ்வுலகத்தில் பெருமை தரும் அணிகலன் யாது
என நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது?
- செழுத்து வளர்ந்து காணப்படும் நெற்பயிரும் ஓங்கி உயர்ந்து வளரும் கரும்பும் நிலத்தின் அணிகலன் ஆகும்.
- குளத்தின் அணிகலனாக இருப்பவை அடர்ந்து செறிந்து விளங்கும் தாமரை இலையும் மலரும் ஆகும்.
- பெண்களிடத்து காணப்படும் நாணம் அவர்கள் இயற்கையாக அணிந்துள்ள அணிகலன் ஆகும்.
- ஒரு மனிதனுக்குச் சிறந்த அணிகலனாக இருப்பது எதுவென்றால் அவன் செய்யும் அறச்செயல்களே ஆகும்.
- அவன் செய்யும் அறச்செயல்கள் அவனுக்குச் சிறப்பினையும் பெருமையினையும் தரும் என்று நான்மணிக்கடிகை கூறுகிறது
- ----------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக