அற இலக்கியம் - நாலடியார் பாடல் 131 பாடலும் விளக்கமும்

                                 

                    நாலடியார் பாடல் 131

நாலடியார் குறிப்பு வரைக.

Ø  நான்கு அடிகளைக் கொண்டது

Ø  400 பாடல்களைக் கொண்டது

Ø  சமண முனிவர்கள் பலரால் பாடப்பட்டது

Ø  இதனைத் தொகுத்தவர் பதுமனார்

Ø  40 அதிகாரங்களைக் கொண்டது

Ø  12 இயல்களைக் கொண்டது

Ø  அறம் (13), பொருள் (24), இன்பம் (3) என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது

Ø  கடவுள் வாழ்த்து என்ற ஒர் அதிகாரமும் உள்ளது.

Ø  இந்நூலை ஜீ.யூ. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்

Ø  ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழமொழி இதன் சிறப்பினை உணர்த்தும்

Ø  இந்நூல் உலகின் நிலையாமைக் கருத்துகளை எடுத்துக்கூறி நிலைத்த இன்பத்தைப் பெற செய்ய வேண்டிய அறச்செயல்களை எடுத்துரைக்கிறது.  

Ø  இதன் காலம் கி. பி. ஏழாம் நூற்றாண்டு

 நாலடியார் பாடல் 131

குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

 

நாலடியார் குறிப்பிடும் கல்வியின் சிறப்பைக் குறிப்பிடுக.

                            அல்லது

நாலடியார் குறிப்பிடும் அழகினைக் குறித்து எழுதுக.

                   அல்லது

கல்வி அழகினால் கிடைக்கும் நன்மை குறித்து நாலடியார் தரும் கருத்தினைக் குறிப்பிடுக.


  • தலைமுடி அழகும், ஆடையின் அழகும், மஞ்சளின் அழகும் என இவ்வுலக இன்பங்களைத் தரும் அழகெல்லாம் அழகு ஆவது இல்லை.
  • ஏனெனில் இவ்வழகுகள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கற்றுத் தருபவை அல்ல. 
  • சமுகத்தை மேம்படுத்தி மனதில் நல்லெண்ணத்தையும் உருவாக்கி நடுவு நிலைமையோடு ஒவ்வொரு மனிதனையும் வாழ வைப்பது கல்வி ஆகும். 
  • எனவே தான் நாலடியார் இவ்வுலகத்தில் உள்ள சிறந்து அழகு எனக் கல்வியைக் குறிப்பிடுகிறது.  
  • -----------------------------------------------------------------------

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி