காப்பிய இலக்கிய வரலாறு
காப்பிய இலக்கியத் தகவல்கள்
·
காப்பிய இலக்கணம் குறித்துக்
கூறும் நூல் தண்டியலங்காரம்.
·
காப்பியம் பெருங்காப்பியம்
சிறுகாப்பியம் என இரு வகைப்படும்.
·
அறம், பொருள், இன்பம், வீடு
என்ற நாற்பொருளையும் கூறுவது பெருங்காப்பியம் எனப்படும்.
·
அறம், பொருள், இன்பம், வீடு
என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிறுகாப்பியம் எனப்படும்.
ஐம்பெருங்காப்பியங்கள்
·
ஐம்பெருங்காப்பியங்கள் என்ற
தொடரை முதன் முதலில் கூறியவர் மயிலைநாதர்; (நன்னூல் 387) உரை.
·
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
·
மணிமேகலை -சீத்தலைச் சாத்தனார்
·
சீவக சிந்தாமணி – திருத்தக்க
தேவர்
·
வளையாபதி -பெயர் தெரியவில்லை
·
குண்டலகேசி – நாதகுத்தனார்
·
சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
இரட்டைக் காப்பியங்கள் ஆகும்.
·
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி,
வளையாபதி என்ற மூன்றும் சமணக் காப்பியங்கள்
·
மணிமேகலை, குண்டலகேசி, என்ற
இரண்டும் பௌத்த காப்பியங்கள்
·
ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும்
சமணக் காப்பியங்கள் ஆகும்.
·
குண்டலகேசிக்கு எதிராகச்
செய்யப்பட்டது நீலகேசி
·
நீலகேசி ஐஞ்சிறு காப்பியத்துள்
ஒன்று (காண்க ஐஞ்சிறு காப்பியங்கள்)
1. சிலப்பதிகாரம்
நூற் குறிப்பு:
·
சிலம்பு +அதிகாரம் = சிலப்பதிகாரம்
·
கண்ணகியின் சிலம்பால் விளைந்த
கதையை முதன்மையாகக் கொண்டது. ஆதலின் சிலப்பதிகாரமாயிற்று.
·
சிலப்பதிகாரம் புகார்க்
காண்டம்(10), மதுரைக் காண்டம் (13), வஞ்சிக் காண்டம் (7) எனும் முப்பெருங்கண்டங்களைக் கொண்டது
·
முப்பது காதைகளை உடையது.
·
இது உரையிடப்பட்ட பாட்டுடைச்
செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.
·
முதற் காப்பியம், இரட்டைக்
காப்பியம், முத்தமிழ் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக்
காப்பியம் எனச் சிலப்பதிகாரத்தைப் போற்றி புகழ்வோர்.
·
ஐம்பெருங்காப்பியங்களில்
முதன்மையானது சிலப்பதிகாரம்
·
ஆசிரியர் இளங்கோவடிகள்
·
சிலப்பதிகாரம் ஆசிரியப்
பாவாலும் கொச்சகக் கலிப்பாவாலும் ஆனது.
ஆசிரியர் குறிப்பு:
·
இளங்கோவடிகள் சேர மரபினர்
·
இளங்கோவடிகளின் தந்தை இமயவரம்பன்
நெடுஞ்சேரலாதன், தாய் நற்சோனை
·
இவரது தமையன் சேரன் செங்குட்டுவன்
·
இளையவரான இளங்கோவே நாடாள்வார்
என்று கணியன் கூறிய கருத்தைப் பொய்ப்பிக்கும் பொருட்டு இளங்கோ இளமையிலேயே துறவு பூண்டு
குணவாயிற் கோட்டத்தில் தங்கினார்.
·
அரசியல் வேறுபாடு கருதாதவர்,
சமய வேறுபாடற்ற துறவி.
·
இவர் காலம் கி.பி. இரண்டாம்
நூற்றாண்டு.
·
சைவ வைணவ நெறிகளையும் பாடிய
சமணநூல் சிலப்பதிகாரம்
·
சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த
உரை எழுதியவர் அடியார்க்கு நல்லார்.
2. மணிமேகலை
·
ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார்
·
வேறுபெயர் தண்டமிழ்ச் சாத்தன்,
தண்டமிழ்ப் புலவன்
·
காலம் 2 ஆம் நூற்றாண்டு
·
இந்நூலுக்கு மணிமேகலைத்
துறவு என்ற பெயரும் உண்டு
·
பௌத்த காப்பியம்
·
தமிழன் இரண்டாம் காப்பிய
நூல்
·
துறவுக்கு முதன்மை கொடுக்கும்
நூல்
·
கோவலனுக்கும் மாதவிக்கும்
பிறந்த மணிமேகலை என்ற பெண்ணின் வரலாற்றைக் கூறும் நூல்
·
காண்டப் பிரிவுகள் இல்லை
·
30 காதைகள் உள்ளன
·
முதல் காதை விழாவறைக் காதை
·
இறுதிக் காதை பவத்திறம்
அறுக எனப் பாவை நோற்ற காதை
·
முழுவதும் ஆசிரியப் பாவால்
ஆனது.
·
ஆசிரியப்பாவாலானது
ஆசிரியர் குறிப்பு:
·
மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார்.
·
சாத்தன் என்பது இவரது இயற்பெயர்
·
இவர் திருச்சிராப்பள்ளியைச்
சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்து மதுரையில் வாழ்ந்தார்
·
கூலவாணிகம் (கூலம் – தானியம்)
செய்தவர்.
·
இவர் மதுரைக் கூலவாணிகன்
சீத்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பெற்றார்.
·
இளங்கோவடிகளும் இவரும் சமகாலத்தவராவார்.
·
இவர் கடைச்சங்கப் புலவர்களுள்
ஒருவர்.
·
இவரது காலம் கி.பி. இரண்டாம்
நூற்றாண்டு என்பர்.
3. சீவக சிந்தாமணி
·
ஆசிரியர் திருத்தக்க தேவர்
·
காலம் 9 ஆம் நூற்றாண்டு.
·
திருத்தக்க தேவர் நிலையாமை
குறித்து எழுதிய நூல் நரிவிருத்தம்
·
விருத்தப்பாவால் இயற்றப்பட்ட
முதல் காப்பியம்
·
சமணக் காப்பியம்
·
மணநூல், காமநூல்,முக்தி
நூல் என்ற வேறு பெயர்களும் உண்டு.
·
வட மொழியில் உள்ள சத்திய
சிந்தாமணி, சந்திர சூளாமணி என்ற இரு நூலையும் தழுவி எழுதப்பட்டது சீவக சிந்தாமணி
·
காண்டப் பிரிவு இல்லை
·
13 இலம்பகங்களையும்
3145 பாடல்களையும் கொண்டது.
·
முதல் இலம்பகம் நாமகள் இலம்பகம்
·
இறுதி இலம்பகம் முக்தி இலம்பகம்
·
காப்பியத் தலைவன் சீவகன்
·
சீவகன் சிந்தாமணியுடன் ஒப்பிடப்பட்டுள்ளான்.
·
சிந்தாமணி என்பது கேட்டதைக்
கொடுக்கும்
·
தேவலோகத்தில் உள்ள ஒரு மணி
(ரத்தினம்)
·
நூல் முழுமைக்கும் சைவரான
நச்சினார்க்கினியர் உரை எழுதினார்.
·
உ.வே.சா. அவர்கள் முதன்
முதலில் பதிப்பித்தார்.
·
கிறித்துவரான ஜி.யு.போப்
இதனை இலியட் ஒடிசியுடன் ஒப்பிட்டுள்ளார்.
4. வளையாபதி
·
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
·
சமணக் காப்பியம்
·
விருத்தப்பாவால் ஆனது
·
முழுமையாகக் கிடைக்கவில்லை
·
கிடைத்தவை 72 பாக்கள்
·
மூல நூல் வைசிக புராணம்
35 வது சுருக்கம் ஆகும்
·
நவகோடி நாராயணன் பற்றிய
நூல்
·
மடலேறுதல் பற்றிக் கூறும்
காப்பிய நூல்
·
இலக்கண இலக்கிய உரையாசிரியர்களால்
மிகவும் போற்றப்பட்ட நூல்
5. குண்டலகேசி
·
ஆசிரியர் நாதகுத்தனார்
·
காலம் 7 ஆம் நூற்றாண்டு
·
பௌத்த காப்பியம்
·
சுருண்ட தலைமுடியை உடையவள்
என்று பொருள்
·
குண்டலகேசி விருத்தம் அகல
கவி என்ற வேறு பெயர்களும் உண்டு.
·
நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை
·
கிடைத்தவை 224 பாடல்கள்
·
குண்டல கேசியின் வரலாற்றை
நீலகேசி கூறுகிறது
·
குண்டல கேசியின் இயற்பெயர்
பத்திரை
·
குண்டலகேசியின் கணவன் காளன்
இவன் ஒரு கள்வன்
·
கலைஞரால் ‘மந்திரி குமாரி’
என்று திரைப்படமாக்கப்பட்டது.
- ஐஞ்சிறு காப்பியங்கள்
·
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும்
சமணக் காப்பியங்களே
·
அறம், பொருள், இன்பம், வீடு
என்ற நான்கில் ஒன்றோ பலவோ குறைந்து வருவது
சிறுகாப்பியம் என்று இதன் இலக்கணத்தைத் தண்டியலங்காரம் கூறுகிறது.
·
நாக குமார காவியம் – ஆசிரியர்
தெரியவில்லை (கந்தியார்)
·
உதயண குமார காவியம் – ஆசிரியர்
தெரியவில்லை (கந்தியார்)
·
யசோதர காவியம் – வெண்ணாவலூர்
உடையார் வேள்
·
நீலகேசி – ஆசிரியர் தெரியவில்லை
·
1. நாககுமார காவியம்
·
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
கந்தியார் ஒருவர் எழுதினார் என்பர்.
·
நாகபஞ்சமி நோன்பின் சிறப்பைக்
கூறும் நூல்
·
இந்நூலுக்கு நாகபஞ்சமி கதை
என்ற வேறுபெயரும் உண்டு
·
இராசகிரியில் உள்ள விபுலி
மலையில் வீற்றிருக்கும் வர்த்தமான மகாவீரரை வணங்குவதற்குச் சிரேணிக மாமன்னனும் அவன்
தேவியாகிய சாலினியும் சென்றனர். அக்கோயிலில் இருந்த தவ முனிவராகிய கௌதமர் அவர்களுக்கு
நாககுமாரனது கதையை எடுத்துரைக்கிறார்.
·
மணத்தையும் போகத்தையும்
மிகுதியாகக் கூறும் சமண நூல்
2. உதயணகுமார காவியம்
·
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
கந்தியார் என்பர்.
·
மூலநூல் பெருங்கதை
·
நாடு வத்தவ நாடு
·
தலை நகரம் கோசாம்பி
·
சூரிய உதயத்தில் பிறந்ததால்
உதயணன் எனப்பட்டான்.
·
உதயணனுக்கு ‘விச்சை வீரன்’
என்ற வேறு பெயரும் உண்டு
·
விச்சை வீரன் என்றால் பலகலை
வல்லவன் என்று பொருள்
3. யசோதர காவியம்
·
ஆசிரியர் வெண்ணாவலூர் உடையார்வேள்
·
சருக்கம் 5, பாடல்கள்
320
·
வடமொழியில் எழுதப்பட்ட உத்திர
புராணத்திலிருந்து இதன் கதை எடுக்கப்பட்டது என்றும், புட்பதத்தர் எழுதிய யசோதர சரிதத்தின்
தழுவல் என்றும் கூறுவர்.
·
உயிர்க்கொலை தீது என்று
உணர்த்தும் நூல்
·
நல்ஞானம் நற்காட்சி நல்ஒழுக்கம்
இம்மூன்றும் மும்மணிகள்
·
ஏழுவகை நரகங்கள் கூறப்படுகின்றன
அவை.
1. இருளில் இருள் 2. இருள்
3. புகை 4. சேறு 5. மணல்
6. பரல் 7. மருள்
4. நீலகேசி
·
நீலகேசி என்றால் கருத்த
கூந்தலை உடையவள் என்று பொருள்
·
ஆசிரியர் பெயர் தெரியவில்லை
·
சருக்கம் 10 (பதிகவுரைச்
சருக்கம் நீங்கலாக)
·
பாடல்கள் 894
·
நீலகேசித் தெருட்டு என்ற
வேறு பெயரும் உண்டு
·
சமண முனிவர் முனிச் சந்திரனை
நீலி என்ற பெண் அச்சுறுத்தி மயக்க முயல்கிறாள். மயங்காத முனிவர் அறிவுரை கூற, அவள்
திருந்தி சமணமதத்தை ஏற்றுப் பிற சமய வாதிகளை வெற்றி கொள்கிறாள்.
·
சமணம் அல்லாத பிற இந்திய
சமயங்களின் கோட்பாடுகளைத் தருக்க முறையில் மறுத்துரைக்கும் நூல்
·
குண்டலகேசி என்ற நூலுக்கு
எதிராக எழுதப்பட்ட நூல் நீலகேசி
·
உரையாசிரியர் சமய திவாகர
வாமன முனிவர்.
·
இவ்வுரைக்குச் சமய திவாகர
விருத்தி என்ற பெயரும் உண்டு
5. சூளாமணி
·
ஆசிரியர் தோலா மொழித்தேவர்.
இயற்பெயர் வர்த்தமான தேவர்
·
சருக்கம் 12 விருத்தப்பாக்கள்
2330
·
காப்பியத் தலைவன் உலகின்
முடிக்கோர் சூளாமணி ஆயினான் என்பதால் சூளாமணி என்று பெயர் பெற்றது. (பலமுறை வருதல்)
·
முதல் நூல் வட மொழியில்
உள்ள ஆருகத மாபுராணம்
·
இதன் கதை ஸ்ரீ புராணத்திலும்
உள்ளது.
பெருங்கதை
·
ஆசிரியர் கொங்குவேள்
·
உதயணன் வரலாற்றை முதலில்
தமிழில் கூறிய நூல்
·
சமணக் காப்பியம்
·
இதற்குக் ‘கொங்குவேள் மாக்கதை”
என்ற பெயரும் உண்டு
·
நூல் முழுவதும் கிடைக்கவில்லை
கிடைத்தவை 5 காண்டங்கள், 99 காதைகள் ஆசிரியப்பாவில் ஆனது
·
முதற் பகுதியும் இறுதிப்
பகுதியும் கிடைக்கவில்லை.
·
முழுக் கதையையும் அறிய உதயணகுமார
காவியம் உதவி செய்கிறது.
·
கதைக் களஞ்சியம் என்று போற்றப்படும்
நூல் பெருங்கதைபிருகத்கதா என்ற பைசாச மொழிநூலை ஒட்டி இயற்றப்பட்டது என்றும் கூறுவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக