சிறப்புத் தமிழ் - வைரமுத்து - நிலத்தை ஜெயித்த விதை
வைரமுத்து
குறிப்பு தருக.
பிறந்த
இடம் : தேனி மாவட்டம், வடுகபட்டி
பெற்றோர் : ராமசாமி - அங்கம்மாள்
இவர் எழுதிய நூற்கள் : வைகறை மேகங்கள், திருத்தி
எழுதிய தீர்ப்புகள், இன்னொரு தேசியகீதம், எனது பழைய பனையோலைகள், கவிராஜன் கதை, இரத்த
தானம், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, தமிழுக்கு நிறமுண்டு, பெய்யெனப் பெய்யும் மழை,
"எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்
விருதுகள்
:
கலைமாமணி
விருது - 1990.
சாகித்ய
அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்)
பத்ம
பூசன் விருது (2014)
சிறந்த
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை).
நிலத்தை ஜெயித்த விதை
அது
எப்படி?
எட்டயபுரத்தில்
மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச்
சுமந்த் கருப்பை?
அது
கூடச் சாத்தியம்தான்
ஆனால்-
இது எப்படி
ஏகாதிபத்திய
எரிமலையை
ஒரு
தீக்குச்சி
சுட்டதே
இது
எப்படி?
உன்
பேனா
தமிழ்த்
தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல்
கோட்டு
கவிதா
தேவிக்குப்
பீதாம்பர
மானது
உன்
எழுத்தில்தான்
முதன்முதலில்
வார்த்தை வாக்கியத்தைப்
பேசியது.
உன் பாதங்களுக்குப்
பூச்சொரிவது
– எங்கள்
பொறுப்பு.
ஆனால் பொறு.
உன் பாதங்களில்
சொரிவதற்கு
எங்கள்
பூக்களைக் கொஞ்சம்
புனிதப்படுத்திக் கொள்கிறோம்.
வைரமுத்து பாரதியாரை எவ்வாறு போற்றுகிறார் என்பதை நிலத்தை ஜெயித்த விதை கவிதை மூலம் விளக்குக.
- பாரதியார் சொல்லிலும் செயலிலும் நெருப்புப் போன்றவர்.
- அவரது சுதந்திரப் பாடல்கள் ஆங்கிலேயருக்கு எதிராக நெருப்பாகச் சுடர்விட்டு எரிந்தது.
- பாரதி என்னும் தீக்குச்சி அந்நிய ஏகாதிபத்திய எரிமலையைத் தனி ஒருவனாக நின்று நெருப்புப்பொறியைப் பற்ற வைத்தார்.
- ஒரு சிறிய விதை நிலத்தை பிளந்து வெளியே வர பூமியின் அடியில் போராடி வெளிவருகிறது.
- அவ்வாறு வெளி வரும் விதையே முளைவிட்டு வெற்றி பெற்று தன் கிளைகளை எங்கும் பரப்புகிறது.
- எட்டயப்புரத்தில் முளைத்த விதை உலகெங்கும் தமிழன்னையின் புகழைப் பரப்பிய பெருமையுடையது.
- கவிதைகளுக்குரிய வளமையின்றி சில நூற்றாண்டுகளாக உறங்கிக் கிடந்த தமிழன்னை பாரதியின் வருகையால் உறக்கம் கலைந்து புத்துயிர் பெற்றாள்.
- உரிமையும் மகிழ்ச்சியும் கண்டுவிட்ட துடிப்பில் பாரதியின் தோள்களில் சோம்பல் முறித்தாள்.
- பாரதியின் எழுதுகோல் எளிமை, இனிமை பெற்று தரணியெங்கும் விரிந்து சென்றாள்.
- அவருடைய கிழிந்த ஆடையே கவிதைத் தாய்க்குப் பட்டாடையாக ஆனது.
- பாரதியைப் போற்ற வேண்டியது கவிஞர்களின் கடமை.
- கவிதைப் பூக்களால் அருடைய பாதங்களுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பது கவிஞரின் எண்ணம்.
- ஆனால் பாரதியைக் பாராட்டிப் பாத பூசை செய்வதற்குக் கவிதை சிறப்பு பெற வேண்டும்.
- உண்மை, தூய்மை கொண்டு தீக்கங்கை உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றார் கவிஞர் வைரமுத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக