பக்தி இலக்கியம் 3.பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார்
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச்
செய்யசுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீ(ங்)குகவே என்று.
பொய்கையாழ்வார் குறிப்பு
- தமிழ் நாட்டுச் சமயங்களில் மிக முக்கியமான சமயங்கள் சைவமும் மாலியமும்ஆகும்.
- மாலியம் என்பது வைணவம் ஆகும். வைணவ நெறியைப் பின்பற்றி பக்திநெறியில் விளங்கியவர் ஆழ்வார் ஆவர்
- ஆழ்வார் மொத்தம் பன்னிருவர்
- பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் பொய்கையாழ்வார்.
- காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் பொற் றாமரைக் குளத்தில் பிறந்தவர் எனப்படுகிறது.
- திருமாலின் ஐம்படைகளில் ஒன்றாக விளங்கும் பாஞ்சசன்யம்என்ற சங்கின் அம்சமாகப் பிறந்தவர்
- இவர் பாடிய பாடல்கள் முதல் திருவந்தாதி என்று அழைக்கப்பட்டன
- இது நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளது
பொய்கையாழ்வார் இறைவனிடம் வேண்டுவனவற்றைக் குறிப்பிடுக?அல்லதுபொய்கையாழ்வார் இறைவனை வழிபடும் முறை குறித்து எழுதுக.அல்லதுபொந்கையாழ்வார் இறைவனுக்கு விளக்கேற்றப் பயன்படுத்தும் பொருள்கள் குறித்து எழுதுக?
- பெருமானே! இந்த உலகத்தையே அகல் விளக்காக எடுத்தேன்
- உலகத்தை வளைத்து நிற்கும் கடல் நீரை அவ்விளக்கிற்கு நெய்யாக வார்த்தேன்
- உலகிற்கு ஒளி தரும் கதிரவனை அவ்விளக்கின் சுடராகப் பொருத்தினேன்
- சுதர்சனம் என்ற சக்கரத்தைக் கையில் ஏந்திய உம்முடைய திருவடிக்கு என் சொல் மாலையைச் சூட்டுகின்றேன்.
- பிறவியாகிய துன்பக்கடலில் இருந்து என்னை விடுவிப்பாயாக” என்று வேண்டுகின்றார்.
- ----------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக