திருவரங்கக் கலம்பகம் – மறம் - பிள்ளை பெருமாள் ஐயங்கார்

 உ. திருவரங்கக் கலம்பகம் – மறம்

- பிள்ளை பெருமாள் ஐயங்கார்


பேசவந்த தூதசெல்லரித்த வோலை செல்லுமோ

பெருவரங்களருளரங்கர் பின்னைகேள்வர் தாளிலே

பாசம்வைத்த மறவர்பெண்ணை நேசம்வைத்து முன்னமே

பட்டமன்னர்பட்ட தெங்கள்பதிபு குந்து பாரடா

வாசலுக்கிடும் படல்கவித்து வந்தகவி கைமா

மகுடகோடி தினையளக்க வைத்தகாலு நாழியும்

வீசுசாமரங் குடிற்றொடுத்த கற்றை சுற்றிலும்

வேலியிட்டதவர் களிட்ட வில்லும் வாளும்வேலுமே.


பாடல் விளக்கம்

எங்கள்பெண்ணை மணம் பேச வந்த தூதனே!  செல்லினால் அரிக்கப்பட்ட ஓலை செல்லுமோ? செல்லாது தம் அன்பர்களுக்குப் பெரிய வரங்களை அருளுகின்ற, திருவரங்கநாதரும், நப்பின்னையின் கணவருமாகிய நம்பெருமானது திருவடிகளில் அன்பு வைத்த, வேடர்களாகிய எங்களது மகளை விரும்பி, முன்னாட்களிலே, பட்டந்தரித்த அரசர்கள் பட்ட பாடுகளை எங்கள் ஊரினுள் வந்து பார். 

எங்கள் வீட்டு வாசலில் வைத்து மூடும் கதவுகள், அவர்கள் பிடித்துவந்த, குடைகள்.  

தினையரிசிகளை, அளக்கும்படியாக, வைத்த மரக்கால்கள், படி முதலிய அளவுகருவிகள் அவர்கள் தரித்து வந்த பெரிய பெரிய கிரீடங்கள்.

எங்கள் குடிசைக்குமேல் மூடுகின்ற கற்றை, அவர்களுக்கு வீசி வந்த சாமரங்கள். 

அவர்கள் தோல்வியடைந்து விட்டுச் சென்ற வில்லும் வாளும் வேலும் எங்கள் வீட்டின் நாற்புறத்திலும் வேலியாகப் போடப்பட்டுள்ளன.

ஆகவே, உன்னை ஏவிய அரசனுக்கும் இந்தக் கதியே நேரும் என்று போய்க் கூறுவாயாக.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி