திருக்குறள் - பொருள் செயல்வகை அதிகாரம்

  திருக்குறள் - பொருள் செயல்வகை
1.பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
2.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு.
3.பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் 
எண்ணிய தேயத்துச் சென்று.
4.அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள்.
5. அருளொடும் அன்பொடும் வாராப் பொகுளாக்கம்
 புல்லார் புரள விடல்.
6.உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் 
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
7.அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் 
செல்வச் செவிலியால் உண்டு.
8.குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை.
9.செய்க பொருளை செறுநர் செறுக்கறுக்கும் 
எஃகதனிற் கூரியது இல்.
10.ஒண்பொருள் காழ்ப்ப இயற்றயார்க்கு எண்பொருள் 
ஏனை இரண்டும் ஒருங்கு
.  

 

1. பொருளால் வரும் சிறப்பாகத் திருவள்ளுவர் கூறுவன யாவை?
ஒரு பொருளாக மதிப்பதற்கு தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும் படியாகச் செய்யக்கூடியது பொருள் ஆகும்.  பொருள் அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருள் யாதும் இல்லை.
பொருள் இல்லாத வறியவரை எல்லாரும் இகழ்ச்சியாகவே பேசுவர்; செல்வம் உடையவர்களையோ எல்லாரும் சிறப்பு செய்து போற்றுவார்கள்.
பொருள் என்னும் நந்தாவிளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய நாடுகளுக்குச் சென்று அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும்
.

 

2. எத்தகைய பொருளினால் இன்பம் கிடைக்கும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
தீய வழிகளில் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்த செல்வமானது, அறவாழ்க்கையையும் இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பதாகும்.
அருள் என்னும் இயல்போடும் மக்களின் அன்போடும் பொருந்தி வாராது தீய வழியில் வந்த பொருளினை விட்டு விட வேண்டும்.
தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங் வேண்டும். அது  குன்றின்மேல் ஏறிநின்று யானைப்போரைக் கண்டவர்க்கு இன்பம் தருவதைப் போன்று இன்பம் தருவதாகும்.
அன்பு என்னும் தாய் பெற்றெடுத்த அருள் என்னும் குழந்தையானது, பொருள் என்கின்ற செல்வம் படைத்த செவிலித்தாயால் வளர்க்கப்பட வேண்டும்
உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும் வேந்தன் பொருளாகும்.
பகைவரின் மனச்செருக்கை அழித்து வெற்றி பெரும் ஆயுதம் பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை; ஆதலால் பொருளை எப்போதும் தேடிக் கொள்ள வேண்டும்.
சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும் என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

 ...............................................................

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இருபதாம் நூற்றாண்டு மரபுக் கவிஞர்கள் மற்றும் மரபுக் கவிதைகள் வளர்ச்சி

III SEM - TWO MARKS QUESTION & ANSWER

சிற்றிலக்கியம் தோற்றம் வளர்ச்சி