நாயக்கர் ஆட்சி
நாயக்கர்
ஆட்சி
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சியின் தோற்றம்
•
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பாண்டியருக்கும் சோழருக்கும் பகைமை
ஏற்பட்டது. சோழன் வீரசேகரன் சந்திரசேசுர பாண்டியனை
முறியடித்தான்.
•
தோல்வியுற்ற பாண்டிய மன்னன்
விசயநகர மன்னனான கிருஷ்ண தேவராயரின் உதவியை வேண்டினான்.
•
அம்மன்னனும் பாண்டிய மன்னனை அரசனாக்கும் நோக்கில் தனது படைத்தலைவர்
நாகம் நாயக்கரை அனுப்பி வைத்தான். அந்த நாயக்கர்
சோழனை வென்றார். ஆனால் அவன் பாண்டியனை அரசன் ஆக்காமல் மதுரையை
அவனே ஆட்சி செய்தான்.
•
இதனை அறிந்த விசய நகர மன்னன் மிகவும் கோபம் அடைந்தார். நாகம் நாயக்கரின் மகனான விசுவநாத நாயக்கரை அனுப்பி நாகம்
நாயக்கரை சிறைபிடித்து வருமாறு கட்டளையிட்டான்.
•
தன் தந்தையை போரில் வென்று விசய நகரத்திற்கு அழைத்துச் சென்றார்
விசுவநாத நாயக்கர்.
•
இதனால் மகிழ்ச்சி அடைந்த
விசயநகர மன்னன் மதுரையில் விசுவநாத நாயக்கரையே தம் பிரதிநிதியாக இருந்து பாண்டிய நாட்டை
ஆளும்படி செய்தார்.
•
இவ்வாறு நாயக்கர் அரசு கி.பி.1529இல் மதுரையில் தோன்றியது.
•
இக்காலத்தில் தஞ்சையை ஆண்ட சோழர்களும்
வலிமையற்றவர்களாக இருந்த காரணத்தால் அங்கும் கி.பி. 1532ஆம் ஆண்டில் நாயக்கர் அரசு
ஏற்பட்டது.
•
மதுரையில் நாயக்கர் அரசு கி.பி. 1532 முதல் 1675 வரை இருந்தது.
•
செஞ்சியில் நாயக்கர் அரசு கி.பி. 1464 முதல் 1640 வரை இருந்தது.
• இவ்வாறு தமிழரசு ஒழிந்து நாயக்கர் ஆட்சி தோன்றியது
நாயக்க மன்னர்கள்
தமிழகத்தை ஆட்சி செய்த நாயக்கர் மன்னர்களின் பெயர்ப் பட்டியல்
- விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529 1564)
- முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1564 1572)
- வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572-1595)
- இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1595-1601)
- முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1601 1609)
- முதலாம் முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி. 1609 - 1623)
- திருமலை நாயக்கர் (கி.பி. 1623 1659)
- இரண்டாம் முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி. 1659)
- சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1659 1682)
- மூன்றாம் முத்து வீரப்ப நாயக்கர் (1682 - 1689)
- இராணி மங்கம்மாள் (கி.பி. 1689 1706)
- விசயரங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி. 1706 -1732)
- இராணி மீனாட்சி (கி.பி. 1732 1736)
போன்றோர்கள் ஆவார்.
விசுவநாத நாயக்கர் (கி.பி.
1529 - 1564)
•
விசயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயரின் பிரதிநிதியாகத்
தமிழகத்தின் தென்பகுதியை ஆளத் தொடங்கியவர்
•
சிற்றரசர்களை அடக்கி, நாட்டில் அமைதி உண்டாக்கியவர்
•
தென்காசிப் பாண்டியர்களோடு நட்பு கொண்டவர்
•
வைகையின் மற்றும் காவிரி ஆற்றின் இரு கரைகளிலும்
இருந்த காடுகளை அழித்தார்.
•
மதுரையைப் புதுப்பித்தார்
•
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை விரிவாக்கினார்
•
திருச்சியிலும் கோட்டை அமைத்தார்
மூன்றாம் முத்து வீரப்ப
நாயக்கர் (கி.பி. 1682 - 1689)
- 1682ஆம் ஆண்டு அரியணை ஏறியவன்
- உள்நாட்டு சீர்திருத்தங்களிலும், மக்கள் நலன் பாதுகாப்பதிலும் கவனம் கொண்டிருந்தார்.
- மக்கள் மகிழ ஆட்சி செய்தான்
ராணி மங்கம்மாள் (கி.பி. 1689 - 1706)
•
1689ஆம் ஆண்டு அரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர்
இறந்தபோது, அவனுடைய மனைவி முத்தம்மாள் கருவுற்றிருந்தாள்.
•
ஆண் குழந்தையைப் பெற்றுப் பாட்டி மங்கம்மாளிடம்
கொடுத்துவிட்டுத் தீக்குளித்து உயிர் நீத்தாள்.
•
பிறந்த மூன்றாம் மாதத்தில் அக்குழந்தை விசயரங்க
சொக்கநாதன் என்ற பெயரில் அரசன் ஆனான். மங்கம்மாள் தன் பேரனுக்காகப் பிரதிநிதியாக இருந்து
ஆட்சி செய்தார்.
அரசு முறை
•
தமிழக நாயக்கர்கள் பரம்பரை அடிப்படையில் முடிசூட்டிக்
கொண்டனர்
•
மூத்த மகனுக்கு அரசப் பொறுப்பு வழங்கப்பட்டது.
•
நாயக்கர்கள் அமைமச்சர்கள் உதவியோடு ஆட்சி செய்தனர்.
நீதித்துறை
•
நீதித்துறையின் தலைவராக அரசனே பொறுப்பேற்றிருந்தார்
•
நீதி வழங்குவதில் முக்கிய அனமச்சர்களும் பொறுப்பேற்றிருந்தனர்
வருவாய்
•
நாயக்கர்கள் ஆட்சியில் நிலவரியே அரசின் முக்கிய
வருவாயாக இருந்தது. நிலங்கள் நன்செய், புன்செய் என்று பிரிக்கப்பட்டு வரிகள் விதிக்கப்பட்டன
•
பஞ்ச காலத்தில் வரிகள் தள்ளுபடி செய்யப்பெற்றன.
•
சொத்துவரி, வாணிக வரி, தொழில்வரி, படைக்கொடை,
சமுதாயக்குழு வரி, ஏரி வரி முதலிய வரிகள் வசூலிக்கப்பட்டன
படைகள்
•
நாயக்கர்கள் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை
முதலியவற்றை வைத்திருந்தனர்.
•
பீரங்கிப் படையும் அவர்களிடம் இருந்தது. அரேபியா,
பாரசீகம் ஆகிய நாடுகளில் இருந்து குதிரைகளைக் கொண்டு வந்து குதிரைப் படையைப் பெருக்கினர்.
ஆட்சிப் பிரிவுகள்
•
நாடு பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு இருந்தது.
விசுவநாத நாயக்கர் காலத்தில் மதுரை 72 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
•
இம்முறை அக்காலத்தில் சிறப்புடன் செயல்பட்டிருந்தது.
•
இம்முறையால் சோழ பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் புகழுடன் விளங்கிய கிராமச் சபைகள் அழிந்து போயின
நாயக்கர்கள் கால சமுதாய நிலை
சாதிப் பிரிவுகள்
•
சாதிகளைப் போற்றிப் பாதுகாத்தனர்
•
இதனால் சாதிகள் வேரூன்றி வளர்ந்தது
•
ஒவ்வொரு சாதி மக்களும் ஊரின் தனித்தனி பகுதிகளில்
குடியிருந்தனர்
•
அக்ரகாரங்கள், கம்மாளர் தெரு, வேளாளர் தெரு,
செட்டித் தெரு, பறைச்சேரி முதலியவை இருந்தன
சமயம்
- நாயக்கர்கள் இந்து மதக் கோவில்களுக்கு அறப்பணிகளும், திருப்பணிகளும் செய்துள்ளனர்.
- நாயக்கர் காலத்தில் தமிழகத்தில் கிறித்துவம் உள்நுழையத் தொடங்கியது. இராபர்ட் டி நொபிலி, சான் -டி- பிரிட்டோ ஆகியோர் கிறித்துவ சமயத்தைத் பரப்பத் தொடங்கினர்
- திருமலை நாயக்கர் கிறித்துவர்களுக்குப் பல சலுகைகளை வழங்கியுள்ளனர்
பெண்களின் நிலை
•
பெண்கள் கல்வி கற்றதாகத் தெரியவில்லை
•
உயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கல்வி கேள்விகளில்
சிறந்து விளங்கினர்.
•
ராணி மங்கம்மாளும், மீனாட்சியும் மதுரையை ஆட்சி
செய்துள்ளனர்
•
கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்னட ஏறும் வழக்கம்
இருந்துள்ளது.
•
தேவரடியார்கள் கோவில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கல்வி
•
நாயக்கர்கள் காலத்தில் கோவில்களும், மடங்களும்
கல்வியைப் பரப்பும் பணியைச் செய்தனர்
•
திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அக்காலத்தில் வழக்கில்
இருந்துள்ளன.
•
அக்காலத்தில்
பெரும்பாலும் கல்வி பார்ப்பனர்களுக்கு உரியதாகக் கருதப்பட்டது.
•
தமிழ்க்கல்வி தமிழகத்து மடங்களால் போற்றி வளர்க்கப்பட்டது.
•
கிறித்துவப் பாதிரியார்கள் பள்ளிகளை நிறுவிக்
கல்வி பரப்பும் பணியில் ஈடுபட்டனர்
கட்டிடக்கலை
• நாயக்கர்கள் காலத்தில் கட்டிடக்கலை போற்றி வளர்க்கப்பட்டது.
• சிதம்பரம், காஞ்சிபுரம் கோவில்களில் புதிதாகக்
கோபுரங்கள் அமைத்தனர்
• மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பெரிதாக்கினர்
• திருமலை நாயக்கர் கட்டிய அரண்மனை, தெப்பக்குளம்
முதலியன நாயக்கர்களின் கட்டிடக்கலையின் சிறப்பை
விளக்குகின்றன
இலக்கிய வளர்ச்சி
நாயக்கர்கள் காலத்தில்
தமிழ் இலக்கியம், சமயச் சார்புள்ளதாக வளர்ந்துள்ளது.
•
வில்லி பாரதம் - வில்லிபுத்தூர் ஆழ்வார்
•
திருப்புகழ் - அருணகிரிநாதர்
•
திருவிளையாடற்புராணம் - பரஞ்சோதி முனிவர்
•
அரிச்சந்திர புராணம் - வீர கவிராயர்
•
பிரபுலிங்க லீலை - சிவப்பிரகாசர்
•
போன்றோரும் எழுதியுள்ளனர்
•
தாயுமானவர், குமரகுருபரர் ஆகியோரும் இக்காலத்தில்
தோன்றி இலக்கியம் படைத்துள்ளனர்
•
உமறுப்புலவர், குணங்குடி மஸ்தான் சாகிபு, வீரமாமுனிவர்
போன்ற பிற சமயப் புலவர்களும் தோன்றி இலக்கியம்
படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக